கோலாலம்பூர், மார்ச் 14 –
நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் குறைந்த பட்ச சம்பள முறை, மறு ஆய்வு செய்யப்படும் என்று மனித வள அமைச்சர் ஸ்திவன் சிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த குறைந்த பட்ச சம்பள ஆய்வில் முதலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளும் முதலில் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டு தேசிய சம்பள பேச்சுவார்த்தை மன்ற சட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டில் குறைந்த பட்ச சம்பள முறையை மனித வள அமைச்சு மறு ஆய்வு செய்யும் என்று மக்களவையில் பாத்தாங் சாடிங் , ஜி.பி.ஸ் உறுப்பினர் ரொடியா சாப்பி யின் கேள்விக்கு பதில் அளிக்கையில் ஸ்திவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.