நான் குற்றம் இழைத்திருந்தால் தாராளமாக புகார் செய்யுங்கள்

எனது பணிக்காலத்தில் குற்றம் எதுவும் இழைத்திருப்பேன் என்றால் மக்கள் தாராளமாக புகார் செய்யலாம் என்று போலீஸ்படை தலைவர் டான் ஶ்ரீ Razarudin Husain கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று தாம் உட்பட அரச மலேசிய போலீஸ் படையின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குற்றம் இழைத்து இருப்பார்களேயானால் மக்கள் அதுக்குறித்து புகார் செய்ய தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

அரச மலேசிய போலீஸ் படையின் மாண்பு, அதன் உயரிய நன்னெறி ஆகியவற்றை காக்கும் பொருட்டு தவறிழைக்கும் போலீஸ்காரர்கள் மீது புகார் செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டக்கூடாது என்று IGP கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், Pandamaran குற்றத்தடுப்பு மீதான விழிப்புணர்வு உரையில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையில் Razarudin Husain இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்