பேரா, Bidor குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்ற 131 சட்டவிரோத குடியேறிகளில் மேலும் இரு Rohingnya பிரஜைகள் இன்று காலையில் பிடிப்பட்டு இருப்பதாக பேரா போலீஸ் தலைவர் Yusri Hassan Basri தெரிவித்தார்.
இன்று காலை 7 மணி வரையில் 41 பேர் மீண்டும் பிடிப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற அவ்விருவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக Tapah மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக Yusri Hassan கூறினார்.
தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 131 கைதிகளில் ஒருவர் பேரா வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 335 ஆவது கிலோமீட்டரில் விபத்தில் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.