41 வெளிநாட்டு கைதிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்

பேரா, Bidor குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்ற 131 சட்டவிரோத குடியேறிகளில் மேலும் இரு Rohingnya பிரஜைகள் இன்று காலையில் பிடிப்பட்டு இருப்பதாக பேரா போலீஸ் தலைவர் Yusri Hassan Basri தெரிவித்தார்.

இன்று காலை 7 மணி வரையில் 41 பேர் மீண்டும் பிடிப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற அவ்விருவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக Tapah மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக Yusri Hassan கூறினார்.

தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற 131 கைதிகளில் ஒருவர் பேரா வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 335 ஆவது கிலோமீட்டரில் விபத்தில் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்