நிவாரண மையத்தில் இருக்கின்றவர்களுக்கு சுகாதார பரிசோதனை

கிளந்தான், ஸ்ரீ கியாம்பாங் தேசிய பள்ளியில் நிவாரண மையத்தில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

காங்காங் சிகிச்சையகம் மற்றும் பெங்காலான் செப்பா முகாமின் மலேசிய ஆயுதப்படை மருத்துவ மையம் வழங்கிய இச்சேவையினால் தங்களின் உடல்நிலையை பரிசோதிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக 58 வயதுடைய நூர் ஐடி இஸ்மாயில் தெரிவித்தார்.

வெள்ளத்தால் சிறு காயங்களுக்கு ஆளாகி இருப்பவர்கள், இரும்பல், காய்ச்சல் என்று சிறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு இந்த சுகாதார பரிசோதனை பெரும் உதவியாக இருக்கும் என்று நூர் ஐடி கூறினார்.

இந்த நிவாரண மையத்தில் இருக்கும் வரையில் மக்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்