நீண்ட நேரம் காத்திருந்தல் ஏற்பட்ட சண்டைக்கு காரணம்

ஜொகூர் பாரு, சவுத்கீ- யில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நீண்ட நேரம் காத்திருந்ததுதான் கர்ப்பணி காசாளருக்கும் பெண் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

அந்த வாக்குவாதத்தில் கர்ப்பிணி காசாளர்-யை பெண் வாடிக்கையாளர் குத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் கூறினார்.

நேற்று மாலை 6:32 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் தாக்கப்பட்டதில் கண்ணின் கீழ் காயமடைந்திருப்பதுடன் வீக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் காவல் நிலையத்திற்கு வந்ததாக ரவுப் செலமட் விவரித்தார்.

ஒரு பொருளை வாங்குவதை ரத்து செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததால் கோபமடைந்து பாதிக்கப்பட்டவரை சந்தேக்கிக்கும் பெண் காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரனையில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரவுப் செலமட் இன்று தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்