பணியாளரை துன்புறுத்திய தனியார் கிளினிக் மருத்துவர் விசாரனை

ஜெம்புல், பந்தர் பாரு செர்டிங் -கில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் பணிப்புரியும் பெண்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த கிளினிக்கின் மருத்துவர் இன்று பகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 36 வயதுடைய டாக்டர் முகமது அமீன் ரசாலி, மாஜிஸ்திரேட் நார்ஷாஸ்வானி இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு 10:30 மணியளவில் 25 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை ஓய்வெடுக்கும் அறையில் கையை பிடித்து ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்