நெகிரி செம்பிலானில் புதிய எதிர்க்கட்சி தலைவராக ஹனிபாஹ் அபு பக்கர் நியமனம்.

நெகிரி செம்பிலான், மார்ச் 22.

நெகிரி செம்பிலானில் புதிய எதிர்க்கட்சி தலைவராக மாநில பேரிக்காதான் நசியனால் தலைவரும் லாபு சட்டமன்ற உறுப்பினருமான மொஹமட் ஹனிபாஹ் அபு பக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த கெமாஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிட்சுவான் அஹ்மத்-டிற்கு பதிலாக அவர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

நெகிரி செம்பிலான் பேரிக்காதான் நசியனால்-லின் தலைமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மாநில தலைவர் என்ற அடிப்படையில் பெர்சத்து கட்சியைச் சார்ந்த மொஹமட் ஹனிபாஹ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில கூட்டணிக்கான செயலாளர் முகமது நோராபெண்டி சல்லெஹ் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி 29ஆம் தேதி, பெர்சத்து துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மத் பய்சால் அஸுமு-விற்கு பதிலாக மொஹமட் ஹனிபாஹ், நெகிரி செம்பிலான் பேரிக்காதான் நசியனால்-லின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்