ராவுப், ஏப்ரல் 08-
லிங்க்காரான் தெங்காஹ் உத்தாமா(LTU) நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக u-turns செய்த சாலை பயனாளரை குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளியை தொடர்ந்து போலீசார் அந்நபரை தேடி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் ராவுப், LTU – வில் இச்சம்பவம் நடந்திருப்பது அக்காணொளியில் கண்டறியப்பட்டதாக ராவுப் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மோஹட் ஷாஹ்ரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் நெரிசலை தவிர்ப்பதற்காக அந்நபர் u-turns செய்து வாகனத்தை செலுத்தி சென்றதாக மோஹட் ஷாஹ்ரில் கூறினார்.
அத்தகைய செயல் பொதுமக்களிடையே எதிர்மறையான கருத்துக்களையும் கட்டனங்களையும் பெற்று வருவதுடன் சாலையை பயன்படுத்தும் மற்ற பயனர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.