நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை

புத்ராஜெயா, ஏப்ரல் 01 –

வரவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகையாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Gred 56 தொடங்கி நியமன ஊழியர்கள் உட்பட கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அந்த உதவிதொகை செலுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்கள், ஓய்வூதியம் பெறாதவர்கள் என முன்னாள் ஊழியர்களுக்கு 250 வெள்ளி வழங்கப்படும்.

இன்று புத்ராஜெயா-வில் நடைபெற்ற பிரதமர்துறை பணியாளர்களுடனான மாதந்திர சபைக்கூடல் நிகழ்வில், பிரதமர் அந்த அறிவிப்பை செய்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்