முன்னாள் போலீஸ் அதிகாரி கைது

பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் போலீஸ் சீருடை அணிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

40 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் ஈப்போ, டூடா டோல் பிளாசா அருகிலுள்ள செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போலீஸ் ரோந்து பிரிவின் உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்நபர் போலீஸ் சீருடை அணிந்திருந்து சட்டவிரோதமாக செயல்பட்ட 14 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சந்தேகிக்கும் ஆடவர் யமஹா மோட்டார் சைக்கிளில் பயணித்து சாலையில் ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ய முயற்சித்த வேளையில் ரோந்து அதிகாரிகளால் அது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

காவல்துறை அதிகாரியைப் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 170 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்