பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

கம்போங் மோரிப், மார்ச் 22.

இரண்டு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட ஓர் இந்திய ஆடவர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, சினிமா பாணியில் பாடல் பாடியவாறு மிரட்டும் தோரணையில் சென்ற காட்சியை கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த நபர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, பந்திங், ஜாலான் கம்போங் மோரிப் சாலையில் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, அந்நபர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அஹ்மத் ரித்வான் முஹம்மத் நோர் தெரிவித்தார்.

குடும்ப பிரச்னை காரணமாக அந்த நபர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு சென்றதாக நம்பப்படும் வேளையில் அவர் தற்போது 1958 ஆம் ஆண்டு அபாயரக ஆயுத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்