பாலத்திலிருந்து விழுந்து, நீரில் மூழ்கிய நபர்

சுக்காய், மார்ச் 19 –

கெமானான், புக்கிட் குவாங் கில் ஆடவர் ஒருவர் பாலத்திலிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 7:22 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து அவ்விடத்திலிருந்த பொதுமக்கள் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததாக Kemaman மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Hanyan Ramlan தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 44 வயதுடைய அந்நபர் 50 மீட்டர் உயரத்திலுள்ள அந்த பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் பின் அவரின் உடல் ஆற்றின் கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் Hanyan Ramlan கூறினார்.

ஜொகூரை சேர்ந்த அவ்வாடவர் பாலத்திலிருந்து குதிப்பதற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்ததாகவும் அவர் பயணித்து வந்த வண்டியை சோதனையிட்ட போது பல நோட்டுகள் கண்டறியப்பட்டதாகவும் ஹன்யா ராம்லான் தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர் குடும்ப பிரச்னையில் மனவுளைச்சலை எதிர்கொண்டிருப்பதாகவும் இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்