பாலியல் குற்றத்தை ஒப்புக்கொள்ள தவறிய இந்திய ஆடவர்

தெலுக் இந்தான், மார்ச் 21 –

இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிறுமியை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி இந்தான் நூருல் பாரேனா சைனால் அபிடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 34 வயதுடைய விகெ நாலேந்திரன் குற்றவாளியற்றவர் என்று ஒப்புக் கொண்டார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் தெலுக் இந்தான் பாத்து 3½ – வில் உள்ள ஒரு வீட்டில் 11 வயது சிறுமியிடம் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 14 (a) -யின் கீழ் அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பதை குறித்து வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி இந்தான் நூருல் பாரேனா சைனால் அபிடின் உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்