ரெம்பிட் ரமாடான் 4 மாணவர்கள் கைது

பாசிர் பூத்தே, மார்ச் 21 –

ரமடான் மாதத்தில் சட்டவிரோதமாக மோட்டார் பந்தையத்தில் ஈடுபட்ட நான்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓபி சம்சேங் ஜாலானான் திடீர் சோதனையில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களை பாசிர் பூத்தே மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க பிரிவின் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 19 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சைத்துல் ரீசால் சக்காரியா கூறினார்.

பல்வேறு போக்குவரத்து விதிமீறலுக்காக ஏழு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 33 சம்மன்கள் அனுப்பப்பட்டதாக சைத்துல் ரீசால் மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்