பாலியல் நடவடிக்கை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

குவாலா திரங்கானு, மார்ச் 21 –

மாது ஒருவரை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு பாலியல் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக ஆசிரியர் ஒருவர் கோலத்திரெங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

48 வயது மொகமாட் ஹஷ்ப்யனிசாம் மன்சோர் என்ற அந்த ஆசிரியர் மேலும் ஒரு நபருடன் கூட்டு சேர்ந்து கடந்த மார்ச் 11 ஆம் தேதி காலை 2.35 மணியளவில் கோலத்திரெங்கானு, ஜாலான் சுல்தான் ஒமாரில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் 29 வயது மாதுவை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு பேரம் பேசியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்ட மனித கடத்தல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்