ஷா அலாம், மார்ச் 2 –
மிரட்டிப் பணம் பறித்தல், கொள்ளையடித்தல், லஞ்ச ஊழலில் ஈடுபடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸ்காரர்கள், சேவையிலிருந்து நிறுத்தப்பட வேண்டும் என்று MCW எனப்படும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு, அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
நேர்மை,கட்டொழுங்கு, நம்பகத்தன்மை போன்ற தனித்துவமான ஆளுமைகள் நிறைந்த போலீஸ் துறையின் மாண்பு, அதன் செயல்திறன், நம்பிக்கை காக்கப்படுவதற்கு குற்றற்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று உறுதி செய்யப்படும் போலீஸ்காரர்களின் சேவை, முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலீஸ்காரர் ஒருவர், குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்குமானால் அவரை பதவியிறக்கம் செய்தல், பணியிடம் மாற்றம் செய்வது, அல்லது அலுவல் பணியில் ஈடுபடுத்துவது போன்ற மாற்று நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமன பலனை தராது என்று அரச மலேசிய போலீஸ் படைக்கு ஜாயிஸ் அப்துல் காரிம் அறிவுறுத்தியுள்ளார்