பிலிப்பைன்ஸுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வான் இப்ராஹிம் சட்டத்துறைக்கான கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். தலைநகர் மணிலாவில் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், பிரதமருக்கு இந்த உயரிய பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தது.
தம்மை பொறுத்தவரையில் மணிலா, தமக்கு ஒரு சிறப்பான நகரமாகும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார். மணிலாவில் அப் பல்கலைக்கழகத்தின் ஒரு முன்னாள் மாணவர் என்ற முறையில் கடந்த கால நினைவுகள் தம் கண் முன்நிழாடுவதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.