பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மார்ச் முதல் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு பிலின்பைன்ஸுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.
தமது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் முதிர்நிலை அமைச்சர்களுடன் பிரதமர் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நாட்டின் 10 ஆவது பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் 5 ஆவது அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
பிரதமர் தம்பதியர் சென்ற சிறப்பு விமானம், தலைநகர் மணிலாவில் Villamor ஆகாயப்படை விமானத் தளத்தில் இன்று மதியம் 12.50 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பிலிப்பைன்ஸ் சமூகவியல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் Rexion Gatchalian பிரதமரை விமானத் தளத்தில் வரவேற்றார். பிலிப்பைன்ஸ் அதிபர் Ferdinand Marcos ஜுனியர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் அன்வார் அந்த ஆசியான் உறுப்பு நாட்டிற்கு சென்றுள்ளார்.