பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜப்பானுக்கு ஐந்து நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டு இன்றிரவு தோக்கியோ சென்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றப்பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் ஜப்பானுக்கு மேற்கொள்ளும் முதலாவது வருகையாகும்.
பிரதமரின் இந்த அதிகாரத்துவ அலுவல் பயணத்தின் போது ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா- வை சந்திப்பதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் இரு வழி தொடர்பில் கூட்டு பங்காளித்து வியூக திட்டத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஷஹரில் எஃபெண்டி அப்துல் கானி தெரிவித்தார்.