பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்னமும் சீராகவுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 7 –

நோன்பு பெருநாளை முன்னிட்டு, பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னமும் சீராக உள்ளது.

விடுமுறையை தொடர்ந்து பொதுமக்கள் நேற்று தொடங்கி தங்களின் கிராமத்திற்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை 5 மணி வரையில் வடக்கு, தெற்கு மற்றும் கிழ‌க்கு கரையோர போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கோலாலம்பூரும் காராக் நெடுஞ்சாலை மற்றும் கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை ஆகிய இரு திசைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்