பத்து பாஹாட்,பிப்.12
மூவர் பயணித்த கார், திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் மாது ஒருவர் காயத்திற்கு ஆளான வேளையில் மற்றொரு பெண்ணும் , ஒரு சிறாரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஜோகூர்,பத்து பாஹாட், ஜாலான் பாக்காவ் சொன்டோங்கில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து, மோட்டார் சைக்கிள் முதல் உதவிப்பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன் பெங்காராம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 14 வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து காரில் கொழுந்து வீட்டு எரியும் தீயை முழுமையாக அணைத்தனர் என்று அதன் செயலாக்க அதிகாரி நுர் எடி பாய்மான் குறிப்பிட்டார்.
தீக்காயங்களுக்கு ஆளான பெண் EMRS வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தில் Hyundai Matrix ரக கார் 80 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.