​மூவர் பயணித்த கார் ​​தீப்பிடித்துக்கொண்டது

​பத்து பாஹாட்,பிப்.12
மூவர் பயணித்த கார், திடீரென்று ​தீப்பிடித்துக்கொண்ட​தில் மாது ஒருவர் காயத்திற்கு ஆளான வேளையில் மற்றொரு பெண்ணும் , ஒரு சிறாரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ​ஜோகூர்,பத்து பாஹாட், ஜாலான் பாக்காவ் சொன்டோங்கில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து, மோட்டார் சைக்கிள் முதல் உதவிப்பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன் பெங்காராம் ​தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 14 வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து காரில் கொழுந்து வீட்டு எரியும் ​தீயை முழுமையாக அணைத்தனர் என்று அதன் செயலாக்க அதிகாரி நுர் எடி பாய்மான் குறிப்பிட்டார்.

​தீக்காயங்களுக்கு ஆளான பெண் EMRS வண்டியின் மூலம் மரு​த்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தில் Hyundai Matrix ரக கார் 80 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்