பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன

கோலாலம்பூர், மார்ச் 24 –

கோலாலம்பூர், செரி கெம்பாங்கான் னில் உள்ள ஒரு பிரபல ஆடை அணிகலன்களின் கடை ஒன்று தீயில் எரிந்து பாதிக்கப்பட்டது.

இதுக்குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.29 மணியளவில் தனது தரப்பிற்கு தகவல் கிடைக்க பெற்றதாக சிலாங்கூர் பொது நடவடிக்கை படையினர் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட வளாகத்தின் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு மலாய்காரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு அதிகாரிகள் ஈடுபட்ட வேளையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை Serdang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுக்கிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்