பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்

கோலாலம்பூர், மார்ச் 21 –

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் சுல்தான் அப்துல் சாமாட் டில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில், கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அட்டூழியம் புரிந்த சம்பவம் தொடர்பில் பெண் பக்தர் ஒருவரிடம் பாலியல் சேட்டை புரிந்த ஒருவர், பிடிபட்டுள்ள வேளையில் பெண் பக்தர்களின் கைப்பேசிகளை பறித்து, உடைத்து சேதம் விளைவித்த இருவர், கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஸ்ரீ சிவன் ஆலயத்திற்குள் நுழைந்து பெண் பக்தர் ஒருவரின் தொடையில் கையை வைத்து, பாலியல் சேட்டை புரிந்ததாக நம்பப்படும் 32 வயது நபர், கைது செய்யப்பட்டு, போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள வேளையில் பெண் பக்தர்களின் கைப்பேசியை பறித்து, உடைத்து சேதப்படுத்தியதாக இரு இந்திய நபர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். .

அம்பாங்கை சேர்ந்த சிவகுமார் லிங்கம் என்ற நபர், ஆலயத்தில் இருந்த ஒரு பெண் பக்தரான 50 வயது கலைச்செல்வி கிருஷ்ணன் என்பவரின் கைப்பேசியை , உடைத்து, சேதப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 2 மாத சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.

கோலாலபூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தை சேர்ந்த மற்றொரு நபரான கண்ணபரான் அழகப்பன் என்பவர் , ஒரு பெண் பக்தரான 38 வயது திலகேஷ்வரி சுப்பிரமணியம் என்பவரின் கைப்பேசியை உடைத்த குற்றத்திற்காக 2,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்