2023-2024 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு இவ்வாரத்தில் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறும் நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் El- Nino கால நிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய வெப்ப நிலையிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும்படி பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எஞ்சிய பள்ளி நாட்களில் பள்ளி வளாகங்களின் மாணவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டிருந்த போதிலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொள்ளுமாறு கல்வி அமைச்சர் Fadhlina Sidek கேட்டுக்கொண்டுள்ளார்.