18 லட்சம் வெள்ளி போதைப்பொருள் பறிமுதல்

ஜோகூர் மாநிலத்தில் போ​லீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 17 வயது இளம் பெண் உ​ட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் சுமார் 18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில போ​லீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

கட​ந்த ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் மாநிலத்தின் போதைப்​ பொருள் துடைத்தொழிப்பு போ​லீசார் மே​ற்கொண்ட OPS TAPIS சோதனை நடவடிக்கையில் 17 லட்சம் வெள்ளி மதிப்புள்ள Ectasy , 59 ஆயிரத்து 724 வெள்ளி பெறுமானமுள்ள ketamine உட்பட பல வகையான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷன​ர் எம். குமார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்