ஜோகூர் மாநிலத்தில் போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 17 வயது இளம் பெண் உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் சுமார் 18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் மாநிலத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட OPS TAPIS சோதனை நடவடிக்கையில் 17 லட்சம் வெள்ளி மதிப்புள்ள Ectasy , 59 ஆயிரத்து 724 வெள்ளி பெறுமானமுள்ள ketamine உட்பட பல வகையான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.