பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்

முவார், ஏப்ரல் 01 –

இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 19 வயதுடைய உணவக தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் எந்தவொரு வாக்குமூலம் அளிக்காத நிலையில் முதல் சில நிமிடங்களுக்கு நீதிபதி பாக்கர் மாநாட் வழக்கை ஒத்தி வைத்ததாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் முகம்மது ராப்பி எலியாஸ்-யிடம் நீதிபதி பாக்கர் மாநாட் கேற்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தியபோது அந்நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் ஒரு தங்கும் விடுதிற்கு 15 வயதுடைய அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்