புக்கிட் காப்பார், ஏப்ரல் 01 –
கிள்ளான், ஜாலான் ஹாஜி அப்துல் வாஹித், புக்கிட் காப்பார் மேல்நிலைப்பள்ளி -யில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இக்கோர விபத்தை குறித்து, நேற்று இரவு 10.12 மணியளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு ஒன்று கிடைக்க பெற்றதாக வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவரும், துணை ஆணையருமான S விஜயா ராவ் தெரிவித்தார்.
புக்கிட் காப்பார் -ரிலிருந்து காப்பார் – ரை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் அவ்விரு நபர்களும் பயணித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக விஜயா ராவ் கூறினார்.
சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு வந்தடைந்த போது சம்பந்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்திசையில் வந்த மற்ற வண்டிகளுடன் மோதியதாக விஜயா ராவ் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.