பெர்க்கேசோ உதநிதியைப் பெற்ற ஆர் தினேஷ் குமாரின் குடும்பத்தினர்

பினாங்கு, ஜாலான் புர்மா உள்ள பேரங்காடியில் மின் தூக்கி பராமறிப்புப் பணியில் இருந்த தொழில்நுட்பப் பணியாளர் ஆர் தினேஷ் குமாரின் குடும்பத்தார் பெர்க்கேசோவின் உதவிநிதியைப் பெற்றனர்.

சமூக [ஆதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அந்த உதவிநிதி கொடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

28 வயதான தினேஷ் குமார் இன்னும் திருமணம் ஆகாததால், அந்தத் தொகை தனேஷ் குமாரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

பினாங்கு, தாமான் ஶ்ரீ பினாங்கில் உள்ள தினேஷ் குமாரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற மனிதவள அமைச்சர் அந்த உதவிநிதியை வழங்கியதோடு, மாதம் தோறும் அவர்களுக்கான பெர்க்கேசோவின் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்