பெர்சத்து-வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது தொகுதிகளைக் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.

கோலாலம்பூர், மே 17-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கு ஆதரவு தெரிவித்துள்ள தங்களது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்க வலியுறுத்தி, மக்களவைக்கு நோட்டிசை வழங்க பெர்சத்து கட்சி முடிவெடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, பெர்சத்து கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் பைசால் அசுமு தெரிவித்தார்.

மக்களவையில், அந்த நோட்டிசை விரைந்து வழங்க, பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன்-னுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

UMNO-வை போன்று விருப்பத்திற்கு ஏற்றால் போல் உறுப்பினர்களை நீக்கக்கூடிய கட்சி பெர்சத்து அல்ல. தங்கள் கட்சிக்கென தனி அரசியலைப்பு உள்ளது. அதற்கு கட்டுப்பட்டு உரிய முறையில் மட்டுமே, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்க முடியும் என பைசால் அசுமு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்