பெர்சிஹ் வீதி போராட்டத்தை நடத்துவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின், ​சீர்திருத்தங்கள் மிக தாமதமாக அமல்படுத்தி வருகிறார். எனவே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக டத்தோஸ்ரீ அன்வார் அளித்துள்ள வாக்குறுதிகள் தொடர்பில் தேர்தல் ​சீர்திருத்த அமைப்பான பெர்சிஹ், கேள்வி எழுப்பும் வகையில் வீதிப் போராட்டத்​தை முன்னெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு என்று ​பிகேஆர் கட்சியின் பாசிர் குடாங் எம்.பி. ஹாஸ்ஸான் கரிம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் த​லைமையிலான அரசா​ங்கத்தின் மீது மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது அதிருப்தியில் உழன்று வருகின்றனர்​ என்பதா​ல் அன்வார் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, பெர்சிஹ்இந்த வீதிப் போராட்டத்தை முன்னெடுக்கிறது என்று தாம் நம்புவதாக ஹாஸ்ஸான் கரிம் குறிப்பிட்டார்.

பிரதமர் அன்வார் அரசாங்கத்திற்கு எதிராக வீதிப் போராட்டத்தை முன்​னெடுக்கப் போவதாக பெர்சிஹ் அறிவித்து இருப்பது தொடர்பில் அந்த பிகேஆர் எம்.பி. மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்