பேரா மாநிலத்தில் புதிய தண்ணீர் கட்டணம் எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என அம்மாநில மதிரி பெசார் Datuk Seri Saarani Mohamad தெரிவித்தார்.
பேரா மாநில நீர் வாரியத்தின் இயக்குநர்கள் கூட்டம் எதிர்வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்க உள்ளது. பின்னர் எடுக்கப்பட்ட முடிவை அதிகாரப்பூஎவமாக அறிவிக்கப்படும் என சராணி கூறினார்.
பேராவில் தண்ணீர் கட்டணம் நிச்சயம் அதிகரிக்கும் என்றாலும் அதன் அளவு குறித்த முடிவு இன்னும் எடுக்கப்பட வில்லை. அது மக்களுக்குச் சுமையாக அமையாது என மாநில அரசு உறுதி அளிப்பதாகவும் சராணி சொன்னார்.