பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்

காராக், மார்ச் 29-

காராக் பெந்தோங் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி -யிலிருந்து லென்தாங் -கை நோக்கி செல்லும் 51.4 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்த வேளையில் 14 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவத்தின் போது பேருந்தில் அதன் ஓட்டுநர் உட்பட 16 பேர் இருந்ததுடன் அதில் 12 உள்நாட்டவர்கள் மற்றும் நால்வர் வெளிநாட்டு பிரஜைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து இன்று காலை 7.53 மணியளவில் தீயணைப்பு மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் விபத்தில் காயமுற்றவர்களை பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்தை தொடர்ந்து கிழக்கை நோக்கிச் செல்லும் இருபாதைகள் இடையிலான நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றன.

சாலை நெரிசலை குறைக்கும் வகையில் கொன்த்ரா பாதைகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்