பொதுச்சேவை ஊழியர்களுக்கான 700 ரிங்கிட் சிறப்பு உதவி நிதி உண்மையல்ல!

கோலாலம்பூர், மார்ச் 20 –

பொதுச்சேவை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு உதவி நிதியாக 700 ரிங்கிட் ஏப்ரல் 5ஆம் தேதி வழங்கப்படவிருப்பதாக, நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவலாகி வருகின்றது.

எனினும், அந்த தகவலில் உண்மையில்லை என பொதுச்சேவைத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்த அந்த சுவரொட்டி மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் உள்ள தகவல் பொய்யானவை எனவும் அத்துறை கூறியது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்