பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –
மக்கள் நலன் சார்ந்த ஒரு விவகாரத்தை முன்னெடுத்து நடத்தப்படும் பொது அமைதி பேரணிக்கு போலீஸ் பெர்மிட் அவசியமில்லை என்று பெர்சே முன்னாள் தலைவரும், பெட்டாலிங் ஜெயா முன்னாள் எம்.பி.யுமான மரியா சின் வலியுறுத்தியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு பொது அமைதி சட்டத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் இது போன்ற பொது அமைதி பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்கின்றவர்கள், அது குறித்து முன்கூட்டியே போலீஸ் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர அந்த பேரணி நடத்துவற்கு போலீஸ் துறையின் அனுமதியை பெற வேண்டும் என்று அந்த சட்டத்தில் வலியுறுத்தப்படவில்லை என்று சமூக போராட்டவாதியுமான மரியா சின் குறிப்பட்டார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே சீர்திருத்தங்களை கோரி, பெர்சே ஏற்பாடு செய்த அமைதி பேரணிக்கு போலீசாரின் அனுமதி பெறவில்லை என்றும், அதன் ஏற்பாட்டாளர்களை விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று மரியா சின் குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டு பொது அமைதி சட்டத்தின் உள்ளடக்கத்தை போலீஸ் துறை மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.