கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலன் – வில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு 10:07 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து, 26 முதல் 46 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹாம் யஹாயா தெரிவித்தார்.
அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக நூர் டெல்ஹாம் கூறினார்.
பொதுமக்களை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு நூர் டெல்ஹாம் கேட்டு கொண்டார்.