அம்பாங், பாண்டன் இந்தா -வில் உள்ள வீடொன்றில் ஆடவன் ஒருவர் புகுந்து கொள்ளையிட்ட சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 24 ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அவ்வாடவன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
வீட்டின் உரிமையாளர்கள் விடுமுறைக்கு வெளிநாடு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்ததாக முகமது ஆசம் கூறினார்.
அந்த ஆடவன் குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் குற்றச்சாட்டப்பட்டுள்ளதுடன் 7 நாள் தடுப்பு காவலில் வைத்திருப்பதாகவும் முகமது ஆசம் விவரித்தார்.