18 எரிவாயு நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு

ஜொகூரில் 18 எரிவாயு நிலையங்களில் நேற்று முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பத்து பஹாட், ஜோகூர் பாரு, கோட்டா டிங்கி, செகாமட் ஆகிய இடங்களில் இருக்கின்ற 11 பெட்ரோல் நிலையங்கள் இதில் உட்பட்டுள்ளதாக ஜொகூர், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவு (கே.பி.டி.என்) அமைச்சகத்தின் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ தெரிவித்தார்.

சில எரிவாயு நிலையங்கள் மட்டுமே டீசல் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிறுவனங்களை கண்காணித்து விநியோகத்தை அதிகரிக்கும் செயல்முறையை மேற்கொண்டு வருவதாகவும் Lilis Saslinda விவரித்தார்.

நாட்டில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் டீசல் குறைந்து வருவதாகவும், இது டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று Petronas Dagangan Berhad கூறியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்