கோலாலம்பூர், மார்ச் 24 –
கோலாலம்பூரிலிருந்து சிரம்பானுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டியை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு 9.40 மணியளவில் போதைப்பொருளுடன் ஹோன்டா EX – 5 ரக மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயற்சித்த ஆடவரை அதிகாரிகள் வளைத்து பிடித்து கைது செய்யப்பட்டதாக போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது சந்தேகிக்கும் நபரிடமிருந்து அலுமினிய தகடுகள், 10 வெள்ளி உட்பட இரண்டு பாக்கெட் heroin கொண்ட போதைப்பொருள் போன்றவை பறிமுதல் செய்யபட்டதாக மொகமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பினையும் நம்பிக்கையும் உறுதி செய்யும் வகையில் சாலையில் ரோந்து பணிகள் மேற்கொள்ளபடுவதாக அவர் மேலும் விவரித்தார்.