கோலாலம்பூர், மார்ச் 24 –
நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 1, 609 ஆக குறைந்துள்ளது.
விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்த போதிலும் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை யுடன் ஒப்பிடுகையில் 181 விபத்துக்கள் குறைந்திருப்பதுடன், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 விபத்துக்களாக உயர்ந்திருப்பதாக மொகமாட் அஸ்மான் இன்று கூறினார்.
சாலையை பயன்படுத்துபவர்கள் கவனமுடனும் சாலை விதிமுறைகளை பின்பற்றி பயணிக்குமாறு அவர் கேட்டு கொண்டார்.