மலாக்கா, மார்ச் 27-
மலாக்காவில் கடந்தாண்டு தொடக்கத்திலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ஆடவரைப் போலீஸ் கைது செய்துள்ளனர்.
பொருள் அனுப்பும் சேவையில் ஈடுபட்டுவரும் 45 வயதுடைய அந்த ஆடவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கை நோக்கி செல்லும் அயெர் கெரோஹ் ஓய்வு தளத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சய்னால் சாமாஹ் தெரிவித்தார்.
அந்நபரிடமிருந்து 130 ஆயிரத்து 971 வெள்ளி மதிப்பிலான 41.28 கிலோகிராம் கஞ்சா மற்றும் திரத்திலான கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சய்னால் சாமாஹ் கூறினார்.
அவ்வாடவர் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் போதைப்பொருளை உட்கொண்டிருக்கவில்லை என்பதை கண்டறியப்பட்ட வேளையில் வருகின்ற சனிக்கிழமை மார்ச் 30 ஆம் தேதி வரையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டத்தோ சய்னால் சாமாஹ் கூறினார்.