KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவுகள் கண்டனம்

பேராக், மார்ச் 27-

பேராக், பிடோர், ஜாலான் ப்ருசேஹ்-விலுள்ள KK மார்ட் கடை மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அல்லா சொல் எழுதப்பட்ட காலுறையை விற்பனை செய்த சர்ச்சையை KK மார்ட் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சூழலில், அந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அக்மால் சாலெஹ் கூறினார்.

இந்நிலையில், KK மார்ட் கடை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், நிலைமையை தணிக்க செய்ய அனைத்து தரப்பினரும் அவ்விவகாரத்தை போலிசிடம் விட்டுவிட வேண்டும். போலீஸ் விசாரணையை மேற்கொண்ட பிறகு, அந்த இழிச்செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

சர்ச்சைக்குரிய காலுறை விற்கப்பட்ட விவகாரத்தில், KK மார்ட் நிறுவனத்திற்கு எதிராக டாக்டர் அக்மால் சாலெஹ் தொடர்ந்து முன்னெடுத்துவரும் பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, KK மார்ட் கடை மீது மீதான தாக்குதலை கண்டித்துள்ள பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் பத்லி ஸாரி, எந்தவொரு தரப்பினரும் போலீசின் விசாரணையை மீறி செயல்படக்கூடாது என வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்