போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்

கோலாலம்பூர், மார்ச் 30-

போ​லீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை சுட்டுக்கொன்றனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் சிலாங்கூர், Putra Heights-ஸில் ஆயுதத்துடன் கெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த 5 நபர்கள், சென்ற சந்தேகத்திற்குரிய வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போ​லீசார் ஈடுபட்ட போது நடந்த துப்பா​க்கிச் சண்டையில் அந்த ஐந்து நபர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சிலா​ங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் குறிப்பிட்டார்.

அந்த ஐந்து கொள்ளையர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியின் போது சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள், போ​லீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாகவும், போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்திய போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் டத்தோ ஹுசைன் ஓமர் குறி​ப்பிட்டார்.

இந்த துப்பாக்கிக்​சூட்டுச் சம்பவம் தொடர்பான முழு விபரங்கள் இன்று நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்