போலீசாரை தாக்கியதில் 5 பேர் கைது

காஜாங், மார்ச் 24 –

காஜாங், தாமான் இம்பியான் இன்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவ தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட வேளையில் மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.

நேற்று 20 க்கும் 30 க்கும் வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்கள் அவ்விடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதுடன் மேலும் சில நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக Selangor போலீஸ் தலைவர் டத்துக் ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 34 வயதுடைய பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Hussein Omar கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹூசேன் ஓமார் மேலும் இன்று விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்