போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

டாமன்சாரா, மார்ச் 25.

கடந்த வாரம் டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி பணக்கட்டுகளை கொண்ட பணப் பெட்டி, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை தங்களால் உறுதி செய்ய இயலவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசெய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

அந்த பணப்பெட்டி தன்னுடையது என்று நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் கூறிக்கொண்ட போதிலும் அவர் இதுவரையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை

அதேவேளையில் பணக்கட்டுகளை கொண்ட அந்தப் பணப்பெட்டி தகவல் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அந்த நிறுவனம் இதுவரையில் அந்தப் பணப்பெட்டி மீது உரிமை கோரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் அந்த பணப்பெட்டி, யாரும் கோரப்படாத உடமை என்றே போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக டத்தோ ஹூசெய்ன் ஒமார் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்