காஜாங், மார்ச் 25.
ஆடவர் செலுத்திய கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த, டிரெய்லர் லோரியின் அடியில் சிக்கி, விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியானார்.
இச்சம்பவம் இன்று காலை 7.39 மணியளவில் மலாக்கா, ஜாசின், பெரின்டஸ்ட்ரியான் காஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது. பேருந்து ஓட்டுநரான வேலை செய்து வரும் 48 வயது மொஹமட் நின் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
கண்ணாடி தொழிற்சாலையிலிருந்து அந்த தொழிற்பேட்டையை நோக்கி டிரெய்லர் லோரி கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத வகையில் புரோட்டான் விரா அந்த டிலெய்லர் லோரியின் வால் பகுதியில் மோதி, , அடியில் நுழைந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹமட் ஜமீல் ரட்சி தெரிவித்தார்.
தலையில் கடும் காயங்களக்கு ஆளான அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அஹமட் ஜமீல் குறிப்பிட்டார்.