போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, ஏப்ரல் 16-

மூத்த காவல்துறை அதிகாரிக்கு 60,000 வெள்ளி லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்ததாக இரு நபர்கள் அயர் கெரோஹ் செசியன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 26 வயது டியோ டெக் கிங் மற்றும் 19 வயது கியோங் கா வை ஆகிய இருவரும் நீதிபதி எலசபெட் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டம் 2009 – யின் 17(6) மற்றும் 24 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டப்படுவர்.

மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தங்களின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு கடந்த ஆண்டு, மலாக்கா தெங்கா மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 60,000 வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக அவ்விருவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்