மகளை அடித்து துன்புறுத்திய தந்தை 5 ஆண்டுகள் சிறை

குவாலா பிலா, மார்ச் 5 –

தனது மகளை அடித்து துன்புறுத்தியதுடன் 12 தையல்கள் போட காரணமாக இருந்த தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 47 வயதுடைய அந்த ஆடவர் நீதிபதி னோர்மல் இஸ்மாயில் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அந்நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாடவர் சுயநினைவோடு தனது 17 வயதுடைய மகளை பிளாஸ்டிக் நாற்காலி, துணிக்கூடை, இஸ்திரி பெட்டி ஆகிய மரணத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி அவரை காயப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரவு 11:45 மணியளவில் ரெம்பாவ், கம்பூங் கென்டொங் பாரு கோத்தா வில் உள்ள ஒரு வீட்டில் நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்