வீட்டின் கூறையில் படுத்திருந்த ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

பேராக், மார்ச் 29-

பேராக், ஈப்போ,மேரு ராயா-விலுள்ள ஒரு வீட்டின் கூரையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் படுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 1.40 மணியளவில், 40 வயதுதக்க அந்த ஆடவரிடம் பக்குவமாக பேசி அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்க செய்வதற்கு , தீயணைப்பு படையினரின் உதவியை போலீஸ் நாடியதாக தெரியவந்துள்ளது.

அந்த வீட்டிற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர், சம்பந்தப்பட்ட ஆடவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

மேல் நடவடிக்கைக்காக அவ்வாடவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அதிகாலை 2.18 மணியளவில் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்