பேராக், மார்ச் 29-
பேராக், ஈப்போ,மேரு ராயா-விலுள்ள ஒரு வீட்டின் கூரையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் படுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 1.40 மணியளவில், 40 வயதுதக்க அந்த ஆடவரிடம் பக்குவமாக பேசி அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்க செய்வதற்கு , தீயணைப்பு படையினரின் உதவியை போலீஸ் நாடியதாக தெரியவந்துள்ளது.
அந்த வீட்டிற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர், சம்பந்தப்பட்ட ஆடவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
மேல் நடவடிக்கைக்காக அவ்வாடவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அதிகாலை 2.18 மணியளவில் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.