ஜொகூர் பாரு, உலு திராமில் மதத்தை பரப்புவதற்கான
தொடர்புடைய நடவடிக்கைகளை குறித்து கண்காணிப்பை அதிகரிக்கும் என்று ஜொகூர் மாநில இஸ்லாமிய மதத் துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இஸ்லாமியத்தின் தூய்மையை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர் இஸ்லாமிய மத விவகார குழுவின் தலைவர் முகமது ஃபேர்ட் முகமது காலித் தெரிவித்தார்.
அதிகளவில் உலு திராமில் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் மற்ற இடங்களிலும் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளவிருப்பதாக அவர் இன்று அறிவித்தார்.