மருத்துவப் பட்டதாரிகளை பயிற்சி மருத்துவர்களாக அரசாங்கம் ஏற்க வேண்டும்

இங்குள்ள மருத்துவக் கல்விச் சாலையில், மருத்துவப் பட்டதாரிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மருத்துவப் பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்வதை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கோரிக்கையை முன்வைத்த Malaysian Medics International தெரிவிக்கயில், சமநிலையற்ற இப்பிரச்னை உடனடியாகக் கலையப்பட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

சிங்கப்பூரை சுட்டிக் காட்டிய அவ்வமைப்பு, மருத்துவக் கல்வி முடிந்த குறுதிய காலத்திலேயே அவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் தற்போது மலேசியாவில் 6 மாதங்களுக்கும் மேலாக அந்தக் கால இடைவெளி இருப்பதாகவும் Malaysian Medics International தெரிவித்தது.

குறிப்பாக, மருத்துவமனைகளில் அதிக பற்றாக்குறை உள்ள பகுதிகளில் மருத்துவர்கள் உடனடியாகப் பணியமர்த்தபட வேண்டும் எனவும் எம் எம் ஐ கூறியது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்